யாரை வழிபட வேண்டும்?
1. அறிவும், வீரியமும், அழகும் பெற முருகப்பெருமானை வணங்கலாம்.
2. ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள ஆஞ்சநேயரை வழிபடலாம்.
3. குடும்ப செழிப்பைப் பெற திருமகளை வணங்கி வரலாம்.
4. யோக சக்தியையும் மந்திர சக்தியையும் பெற அன்னை பராசக்தியை வழிபட்டு வரலாம்.
5. கலையை, கல்வி செல்வத்தை பெற சரஸ்வதியை வழிபடலாம்.
6. யோகத்தில் சிறந்து விளங்க பரமேஸ்வரனை வணங்கலாம்.
7. வெற்றிமேல் வெற்றிபெற ராஜகணபதியை வழிபடலாம்.
8. குடும்பத்தை வாட்டிடும் இன்னல்கள் தீர மாரியம்மன், காளியம்மன், காமாட்சியம்மன் முதலிய தெய்வங்களை வழிபடலாம்.
9. சற்புத்திரனைப் பெற திருச்செந்தில் ஆண்டவனை வணங்கி வரலாம்.
10. இவ்வுலகத்தில் எல்லாவித இன்பங்களையும் அடைய விரும்புபவர்கள் திருமாலை வழிபடலாம்.
லக்ஷிமி கடாட்சம் பெருக
1. அதிகாலை 5மணிக்கு கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து, அதன் பின்னரே தலைவாசலை திறக்க வேண்டும்.
2. அதிகாலை விழித்தவுடன் பசுயாவது, தன முகத்தையாவது அல்லது தன வலது உள்ளங்கையையாவது முதலில் பார்த்து விடவேண்டும்.
3. செவ்வாய், வெள்ளிக்கு 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
4. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால், பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.
5. ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து பால், பாயசம், கல்கண்டு, கனி வகை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.
6. வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்கு சீராக அளிக்கப் பட்ட மேற்கூறியவற்றை, தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாகவும் கூட கொடுக்க கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்கு சேரவேண்டும். முடிந்தால் அவர்களுக்கு புதிதாக வாங்கிக் கொடுக்கலாம்.
No comments:
Post a Comment