நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி என்னைப் புதிய உயிராக்கி -எனக்கேதுங் கவலையறச் செய்து -மதிதன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
- மகாகவிஞன்.



Friday, January 1, 2010

சித்தர்கள் மரபு

சித்தர்கள் மரபு

சித்தர்கள் பதினெட்டு என்கிறது பண்டைய நூல்கள். அவர்கள் கும்பமுனி, நந்திமுனி, கோரக்கர், புலிப்பாணி, புசுண்ட ரிஷி, திருமூலர், தேரையர், யூகிமுனி, மச்சமுனி, புன்னாக்கீசர், இடைக்காடர், பூனைக்கண்ணர், சிவவாக்யர், சண்டிகேசர், உரோமரிஷி, சட்டநாதர், காலங்கிநாதர், போகர் என்று கருவூரார் எழுதிய "அட்டமாசித்து" என்ற நூல் கூறுகிறது.


வேறொரு நூலான நிஜானந்த போதத்தில் பதினெட்டு சித்தர்களின் பெயர்கள் வேறுபடுகிறது அவர்கள்: அகத்தியர், போகர், நந்தீசர், புண்ணாக்கீசர், கருவூரார், சுந்தரானந்தர், ஆனந்தர், கொங்கணர், பிரம்மமுனி, உரோம முனி, வாசமுனி, அமலமுனி கமலமுனி, கோரக்கர், சட்டைமுனி, இடைக்காடர், பிரம்ம முனி போன்றவர்கள் ஆவார்.


இந்த சித்தர்களின் காலத்தை மிகச் சரியாக வரையறுக்க முடியவில்லை. கி. பி. 14-17 ஆம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட கால அளவுகள் பலவற்றை தமிழ் சான்றோர்கள் குறிக்கின்றனர். அகத்தியருக்குப் பிறகு திருமூலர், திருமூலருக்குப் பிறகு மற்றையோர் என சித்தர் மரபு அறியப்படுகிறது.

ஆன்மிகம் தழைக்கவும், மக்களின் ஆரோக்கியம் செழிக்கவும் சித்தர்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றனர். அவர்கள் தத்துவ நெறியிலும், மருத்துவத் துறையிலும் அனேக நூல்கள் செய்துள்ளனர்.


சித்தர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள். கடவுளுக்குச் சமமாய் போற்றி வணங்கப்பட்டனர். சித்தர் வழிபாட்டை முதலில் கொண்டு வந்தது சமணர்கள். பிறகே, மற்றவர்கள் கைக்கொண்டனர்.

புத்த மதத்தின் ஒரு பிரிவான மந்திரயனத்தின் பிறப்பிடம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீபர்வதம். சித்தர்கள் பலரும் ஸ்ரீ பர்வதத் தொடர்பு கொண்டிருந்தனர். புத்த மத சித்தர்கள் 6-12ஆம் நூற்றாண்டுகளில் வாழ்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சித்தர்கள் பல்வேறு குளத்தில் பிறந்தவர்கலாயினும் (அரசர், வணிகர், அந்தணர், கருமார், இன்ன பிற) சித்தர் என்ற தனியொரு மரபுக்கு உரியவராயினர்.


No comments:

Post a Comment